Home உலகம் மாலைதீவில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது

மாலைதீவில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது

by admin


மாலைதீவில் தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அங்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

மாலைதீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் 12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கியது  செல்லுபடியாகாது எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பிரகாரம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியை மீண்டும் வழங்கினால் தற்போதைய ஜனாதிபதியின் பதவி பறிபோகும் சூழல் உள்ளது.

இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து விட்டதுடன் பாராளுமன்றம் கூடுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அரச அலுவலகங்கள் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. நீதிபதிகளின் உத்தரவை ஏற்க கூடாது என அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து ஐ.நா சபையும், சர்வதேச நாடுகளும் தலையிட வேண்டும் எனக் கோரியும் ஜனாதிபதி யாமீன் பதவி விலக வேண்டும் எனக் கோரியும் எதிர்க்கட்சிகளால் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால், எப்போது வேண்டுமானாலும் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தலாம் என்ற சூழல் நிலவிய நிலையில், 15 நாட்கள் அவசரகால நிலையை ஜனாதிபதி யாமீன் பிரகடனப்படுத்தியுள்ளார்.  அதேவேளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பிர்களை கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளதுடன் குடிமக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More