Home இலங்கை பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகள் நால்வருக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை

பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகள் நால்வருக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை

by admin


அரலங்வில பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நால்வருக்கு கடுமையான 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது . அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 2 இலட்சம் ரூபா ஒவ்வொருவரும் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும், வழங்கத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெலட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த நால்வருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 ஆம்  ஆண்டு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் 14 ஆண்டுகளாக இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின்னர் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More