Home இலங்கை சண்முகதாசன் நினைவுப் பேருரை – பேராசிரியர் அ.மார்க்ஸ் கொழும்பில்..

சண்முகதாசன் நினைவுப் பேருரை – பேராசிரியர் அ.மார்க்ஸ் கொழும்பில்..

by admin

இலங்கையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவரான என்.சண்முகதாசன் மறைவின் 25 வது வருடாந்த நினைவை முன்னிட்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பெப்ரவரி 17 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையிலான இந் நிகழ்வில் தமிழகத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பேராசிரியர் அ.மார்க்ஸ் ” மார்க்சியத்தின் சமீபத்திய போக்குகளும் உலகமய பொருளாதாரத்தில் தொழிலாளர் இயக்கங்களின் எதிர்காலமும்”எனும் தொனிப்பொருளில் உரைநிகழ்த்துகிறார்.

வரவேற்புரையை முரளிதரன் மயூரனும் சிறப்புரையை மார்க்சிய – லெனினிச புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான சி.கா.செந்திவேலும் நன்றியுரையை பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கமும் நிகழ்த்துவார்கள். இந்நிகழ்வை மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் ஏற்பாடு செய்திருக்கிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More