Home இலங்கை ரணிலின் உதவியின்றி ஆட்சி அமைக்கத் தயார் – ஐ.ம.சு.கூ

ரணிலின் உதவியின்றி ஆட்சி அமைக்கத் தயார் – ஐ.ம.சு.கூ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்பு இன்றி ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்காது ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, கட்சியின் நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் அறிவித்துள்ளார். அரசியல் குழப்ப நிலைமைகள் நீடித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப் போவதாக முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More