Home இலங்கை நாட்டு மக்களை கருத்திற்கொண்டு அரசியல் தலைவர்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் – கர்தினால்

நாட்டு மக்களை கருத்திற்கொண்டு அரசியல் தலைவர்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் – கர்தினால்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டு மக்களை கருத்திற் கொண்டு அரசியல் தலைவர்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசியல் முரண்பாடுகளைக் களைந்து நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அதிகார மோகத்தில் பிளவடைந்து அரசியல் ரீதியான குழப்பங்களையும் பிணக்குகளையும் ஏற்படுத்திக் கொள்வதனை நிறுத்திக்கொண்டு அரசியல் தலைவர்கள் நாட்டை பற்றி சிந்திக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.மல்வத்து பீடாதிபதி இது குறித்து மிகத் தெளிவாக கூறியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடிப்பார் எனவும் அவருடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More