Home இந்தியா தென் ஆப்ரிக்காவுக்கெதிரான இருபதுக்கு இருபது தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது

தென் ஆப்ரிக்காவுக்கெதிரான இருபதுக்கு இருபது தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது

by admin

தென்ஆப்ரிக்கா மகளிர் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை இந்திய மகளிர் அணி 3-1 என்ற அடிப்படையில் கைப்பறியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசியுமான போட்டி இன்று நடைபெற்ற நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற தென்ஆப்ரிக்கா கனளத்தடுப்பினை மேற்கொள்ள தீர்மானித்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 167 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 112 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்மூலம் 54 ஓட்ட ; வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More