Home இந்தியா முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் இடம்பெறவுள்ளது

முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் இடம்பெறவுள்ளது

by admin

மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் மக்களவையில் இடம்பெற்ற விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் முடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலத்தில் அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது.

முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இந்த மசோதா குடும்பங்களை உடைத்து விடும் எனவும் குடும்ப அமைப்பை சிதைக்கும் வகையிலும், பெண்களுக்கான பிரச்சனைகளை அதிகரிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More