Home இலங்கை தியத்தலாவ பேருந்து குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தர் கைது

தியத்தலாவ பேருந்து குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தர் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தியத்தலாவ பேருந்து குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏ.எம்.ஜே.எல்.கே. சந்திரசேன என்ற இராணுவ உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தியதலாவ கஹாகொல்ல என்னும் இடத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில 12 ராணுவத்தினர் உட்பட 19 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்தநிலையிலேயே இவ்வாறு இராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைக்குண்டு ஒன்றை எடுத்துச் செல்வதாகது ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் கீழான ஓர் குற்றச் செயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தர் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படட நிலையில் அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More