Home இலங்கை லசந்த கொலை தொடர்பான தகவல்களை முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபரே மூடிமறைத்தார்

லசந்த கொலை தொடர்பான தகவல்களை முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபரே மூடிமறைத்தார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான தகவல்களை முன்னாள் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவே மூடிமறைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லசந்த கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் கல்கிஸ்ஸ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லசந்தவின் கள குறிப்புப் புத்தகத்தை காணாமல் போகச் செய்வதற்கு நேரடியாகவே பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார தலையீடு செய்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விடயம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபரிடம் தகவல்கள் காணப்பட்ட போதிலும் அதனை அவர் வேண்டுமென்றே மூடி மறைத்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More