Home இலங்கை ரணிலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள்

ரணிலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்துக் கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இறுதிக் கட்ட முயற்சியாக ரணிலை பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும், சில இளைய உறுப்பினர்களும் இணைந்து ரணிலை பாதுகாப்பதில் 24 மணித்தியாலமும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவும் பிரதமர் பதவியிலிருந்து நீக்கவும் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி ஒரு புறத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும் பிரதமர் பதவியை விட்டு விலகப் போவதில்லை என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More