Home இலங்கை கொக்குவிலில் கடை மீது தாக்குதல். – ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்:

கொக்குவிலில் கடை மீது தாக்குதல். – ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்:

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள வர்ணபூச்சு (பெயிண்ட்) விற்பனை நிலையம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றவர்களை விரட்டி சென்று ஒருவரை கைது செய்த நிலையில் ஏனையவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சம்பவ இடத்திற்கு சென்ற யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றினதும் , தொலைக்காட்சி நிறுவனத்தினதும் மூன்று ஊடகவியாலாளர்களை செய்தி சேகரிக்க விடாது தாக்குதலுக்கு இலக்கான கடையில் நின்றிருந்த இளைஞர் குழு தடுத்துள்னர்.

அத்துடன் ஊடகவியளார்களின் ஒளிப்பட கருவிகளை பறித்து சேதமாக்கி ஊடகவியாலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளகளால் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More