Home இலங்கை யாழில் குற்ற செயல்கள் குறைந்து விட்டன – முதலமைச்சர்

யாழில் குற்ற செயல்கள் குறைந்து விட்டன – முதலமைச்சர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். மாவட்டத்தை பொறுத்த வரையில் குற்ற செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் , அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

காவல்துறை அதிகாரிகள் உடனான கலந்துரையாடல்களின் போது பல விடயங்கள் பேசப்பட்டது. அதன் போது யாழில் தற்போது குற்ற செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும் சட்டவிரோத மண் அகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த சில காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகள்  அவற்றை கட்டுப்படுத்த தாம் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் ; அவற்றை விரைவில் கட்டுப்படுத்தி விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்

அத்துடன் போதை பொருள் கடத்தல்கள் , வியாபாரங்களும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More