Home இலங்கை அவசரகாலச் சட்டம் நீக்கம்

அவசரகாலச் சட்டம் நீக்கம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நள்ளிரவுடன் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

ஜப்பானுக்கான பயணத்தின் போது பல நீண்ட கால மற்றும் குறுகிய கால நலன்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரகாலச் சட்டத்தை நீக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இது தொடர்பான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2062/50 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி நேற்று (17) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More