Home இலங்கை ஐநாவின் மீளாய்வு உபகுழுக் கூட்டம் சர்ச்சையால் பாதியில் முறிந்தது

ஐநாவின் மீளாய்வு உபகுழுக் கூட்டம் சர்ச்சையால் பாதியில் முறிந்தது

by admin

ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற உபகுழுக்கூட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து சென்றுள்ள எலிய அமைப்பின் பிரதிநிதியான சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கேள்விகளை ஏற்படுத்தியமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டதுடன் கூட்டம் குறிப்பிட நேரத்திற்கு முன்தாகவே நிறைவடைந்துள்ளது

குறிப்பாக சரத் வீரசேகர தலைமையிலான பிரதிநிதிகள் உபகுழுக்கூட்டத்தை வழிநடத்திய சர்வதேச பிரதிநிதியான போல் நியூமனுடன் முரண்பட்டுக் கொண்டதனை அடுத்தே கூட்டம் சர்ச்சைகளுடன் நிறைவுக்கு வந்ததுள்ளது.

இந்த உபகுழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ்ப்பாணத்தில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தென்னிலங்கையின் எலிய அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்

இந்தக் கூட்டத்தில் முதலில் உரையாற்றிய யாழ். மனித உரிமை செயற்பாட்டாளர் மணிவண்ணன் காணாமல்போனோர் குறித்து ஆராய காணாமல்போனோர் அலுவலகம் நியமிக்கப்பட்டுள்ள போதும் அதில் மக்களுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்
காணாமல்போனோர் அலுவலகம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைத் தரும் என தாங்கள் நம்பவில்லை எனவும் அரசியல் தீர்வும் கிடைக்காத நிலைமையுடன் பயங்கரவாத தடைச்சட்டமும் இன்னமும் நீக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து உரையாற்றிய பாதிரியார் ஜெயபாலன் குரூஸ் இன்று யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதிபதிக்கெதிராக காணாமல்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டும் அவர் மறுத்துவிட்டார். எனவே இங்கு நீதியை எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உரையாற்றிய சரத் வீரசேகர இங்கு காணாமல்போனோர் தொடர்பில் அனைவரும் இராணுவத்தையே குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் புலிகள் எந்தளவான மனித உரிமை மீறல்களை செய்தனர். சிறுவர்கள் கடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதுடன் கொலைகளையும் செய்தனர் எனத் தெரிவித்தார்.

புலிகள் சிறுவர்களை கடத்தியமை தொடர்பில் நீங்கள் அறிவீர்களா என உபகுழுக்கூட்டத்தை தலைமை தாங்கிய போல் நியூமனைப்பார்த்துக் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த போல் நியூமன் இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலளிப்பார் என்றார்.

இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புலிகள் சிறுவர்களை ஆட்சேர்ந்தமை தொடர்பில் ஐ.நா.வுடன் இணைந்து நடவடிக்கை எடுத்ததாகவும் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More