Home இந்தியா ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது…

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது…

by admin

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அமுலாகத்துறையின் மேல்முறையீடு மனு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ., அமுலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட 19 பேரை விடுதலை செய்யப்பட்டமையை எதிர்த்து, அமுலாக்கத்துறை சார்பில் நேற்றுமுன்தினம் டெல்லி உயர்நீதிமன்றில்  மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. சார்பில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்  என நீதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில் மேல்முறையீடு மனு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More