Home இலங்கை ஐ.நாவில் கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது

ஐ.நாவில் கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது

by admin

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில உப நிகழ்வுகளும் பாதிக்கப்பட்ட அமைப்புக்களினால் நடாத்தப்படுகிறது.  அந்த அடிப்படையில் அண்மையில் கண்டி – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் முயீஸ் வஹாப்தீன் தலைமையில் சிறப்பு அமர்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது,

நேற்று மாலை இடம்பெற்ற இந்த அமர்வில் கண்டி கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டதோடு சிறப்பு விளக்கங்களும் வழங்கப்பட்டது. முஸ்லிம்களின் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் போது பார்த்துக்கொண்டிருந்த பாதுகாப்பு படைகயினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் காவல்துறை மீள் கட்டமைப்பு செய்யப்படவேண்டும் எனவும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் இறைமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் மத வழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா பிரதிநதிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More