Home உலகம் ரஸ்யாவிற்கான ஐரோப்பிய தூதுவர் மீள அழைக்கப்பட்டார்…

ரஸ்யாவிற்கான ஐரோப்பிய தூதுவர் மீள அழைக்கப்பட்டார்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ரஸ்யாவிற்கான ஐரோப்பிய தூதுவர் மீள அழைக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் உளவாளி மற்றும் அவரது மகள் மீது நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலுக்கு ரஸ்யாவே பொறுப்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஸ்யாவிற்கான ஐரோப்பிய தூதுவரை மீள அழைப்பது என ஐரோப்பிய தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

முன்னாள் உளவாளியும் அவரது மகளும் நச்சு இரசாயன தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், இந்த தாக்குதல்களை தாம் மேற்கொள்ளவில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிரித்தானியாவிற்கான ரஸ்ய ராஜதந்திரிகள் மீள அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More