Home உலகம் இத்தாலியில் தேர்தலில் வெற்றியீட்டியோருக்கு இடையில் இணக்கப்பாடு

இத்தாலியில் தேர்தலில் வெற்றியீட்டியோருக்கு இடையில் இணக்கப்பாடு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இத்தாலியில் தேர்தலில் வெற்றியீட்டவர்களுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. சபாநாயகரை தெரிவு செய்வதில் நீடித்து வந்த முரண்பாட்டு நிலைமைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 4ம் திகதி இத்தாலியில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் தொங்கு பாராளுமன்றமொன்றே காணப்படுகின்றது.

பை ஸ்டார் கட்சியின் உறுப்பினர்கள் கீழ் சபை மற்றும் செனட் சபைகளுக்கான சபாநாயகர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கீழ் சபையின் சபாநாயகராக றொபேர்ட்டோ பிகோ ( Roberto Fico   ) உம் செனட் சபையின் சபாநாயகராக எலிஸபெற்றா கசெல்லாட்டி ( Elisabetta Casellati ) உம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சபாநயாகர் பதவி நியமனம் தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட போதிலும்இ ஆட்சி அமைப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More