Home இலங்கை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள் மீள அழைக்கப்பட உள்ளனர்

வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள் மீள அழைக்கப்பட உள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மீள அழைக்கப்பட உள்ளனர். வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக்; கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏப்ரல் 1ம் திகதி நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பிற்கு ஆயத்தமாகும் நோக்கில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்று திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கட்சியின் சில உறுப்பினர்கள் தற்போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More