Home உலகம் USA – 8.7 கோடி பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் பகிரப்பட்டுள்ளது….

USA – 8.7 கோடி பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் பகிரப்பட்டுள்ளது….

by admin

அமெரிக்காவில் உள்ள 8.7 கோடி பேரின் தகவல்கள் இங்கிலாந்து நிறுவனத்திடம் பகிரப்பட்டுள்ளது என முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை முகப்புத்தக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமெரிக்க நாடாளுமன்றின் சிரேஸ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முன் எதிர்வரும் 11-ம் திகதி முகப்புத்தக தலைமை செயல் இயக்குனர் Mark Zuckerberg  முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கவுள்ளார்

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 8.7 கோடி பேரின் தகவல்கள் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் பகிரப்பட்டுள்ளது என முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதுவரை மொத்தமாக 8.7 கோடி மக்களின் தகவல்கள் பகிரப்பட்டு உள்ளன எனவும் இதில் பெரும்பாலும் அமெரிக்க மக்களுடையது எனவும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்குத்தான் இந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன எனவும் முகப்புத்தக நிறுவனத்தின் சிரேஸ்ட தொழிற்பிரிவு அதிகாரி மைக் ஷ்ரோப்பெர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More