Home இலங்கை இணைப்பு 2 – வட மாகாண சபை உறுப்பினர்கள் முல்லை மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம்

இணைப்பு 2 – வட மாகாண சபை உறுப்பினர்கள் முல்லை மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம்

by admin

முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவுக்கு இன்று சென்ற வடமாகாண சபை உறுப்பினர்கள், அங்கு இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், சட்டவிரோத விகாரை அமைக்கும் பணி, அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

இதனை அடுத்து மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் மாவட்டச் செயலரிடம் கையளித்துள்ளனர்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவில்…..

Apr 10, 2018 @ 05:00

 

வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (10.04.18) முல்லைத்தீவுக்கு  சென்றுள்ளனர். இதன்போது, முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் சிங்களக்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கொக்கிளாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் விகாரை, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை என்பவற்றை பார்வையிட்டு, அவை தொடர்பிலும் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More