Home இலங்கை குரோத உணர்வுகளைத் தூண்டும் பிரச்சாரங்களை தடுப்பதற்கு புதிய சட்டங்கள்

குரோத உணர்வுகளைத் தூண்டும் பிரச்சாரங்களை தடுப்பதற்கு புதிய சட்டங்கள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குரோத உணர்வுகளைத் தூண்டக் கூடிய பிரச்சாரங்களை தடுப்பதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குரோத உணர்வைத் தூண்டக் கூடிய பிரச்சாரங்கள், சமூக ஊடகப் பயன்பாடு என்பன தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குரோத உணர்வைத் தூண்டும் பிரச்சாரங்களை தடுப்பதற்கு மலேசியா போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் வழிமுறைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் போன்றனவற்றை தடுக்கும் நோக்கில் இவ்வாறு சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More