Home இலங்கை நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு உடனடியாக விலகப் போவதில்லை – எஸ்.பி. திஸாநாயக்க

நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு உடனடியாக விலகப் போவதில்லை – எஸ்.பி. திஸாநாயக்க

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு உடனடியாக விலகப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள் பதவிவிலகியிருந்தனர். பதவியை துறந்த போதிலும் உடனடியாக நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பிரித்தானிய பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதன் பின்னர், சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியின் ஏனைய அமைச்சர்களும் பதவிவிலக வேண்டும் என எஸ்.பி. திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More