Home இலங்கை UNP, SLFP, EPDP. ஆதரவுடன் வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணி வசம்

UNP, SLFP, EPDP. ஆதரவுடன் வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணி வசம்

by admin

வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. வவுனியா பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட நாகலிங்கம் சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

வவுனியா நகர சபையைக் கைப்பற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணி வவுனியா நகரசபையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More