Home இலங்கை கனேடிய தொடர் கொலையாளியினால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்…

கனேடிய தொடர் கொலையாளியினால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்...

bruce mcarthur toronto
கனடாவில் தொடர் கொலையாளி ஒருவரினால் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புரூஸ் மெக்காத்தர் என்ற இந்த தொடர் கொலையாளி பலரைக் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலை வரிசையில் இலங்கைத் தமிழர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

37 வயதான கிருஸ்ண குமார் கனகரட்னம் என்ற இலங்கைத் தமிழரை குறித்த தொடர் கொலையாளி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையில் இந்த நபர் எட்டு பேரை கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட அனைவரும் காணாமல் போய்விட்டதாகவே கருதப்பட்டு வந்தது. குறித்த கொலையாளி மேலும் கொலைகளைச் செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Bruce McArthur’s alleged victims (clockwise from top left) Selim Esen, Skandaraj “Skanda” Navaratnam, Andrew Kinsman, Majeed “Hamid” Kayhan, Dean Lisowick and Soroush Mahmudi.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More