Home இலங்கை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் கட்டடங்கள் இடித்து அழிக்கப்படும்

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் கட்டடங்கள் இடித்து அழிக்கப்படும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் கட்டடங்கள் அதன் ஆரம்பநிலையிலேயே இடித்து அழிக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களால் ஏகமனதான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின்  முதலாம்  அமர்வு சபைச் சபா மண்டபத்தில்  இன்று   (18.04.2018) காலை நடைபெற்றது .

அங்கு சட்டவிரோத கட்டங்கள் தொடர்பில் எவ்வாறான முடிவினை மேற்கொள்வது என தவிசாளரால் உறுப்பினர்களிடம் கேட்கப்பட்போது விவாதங்களின் பின்னர். சபையின் ஒப்புதலின்றி புதிதாக சட்டவிரோதமாக முறையில் கட்டங்களை அமைக்கவேண்டாம் என மக்கள் மத்தியில் துண்டுப்பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றும். அதனை மீறி சட்டவிரோதமாக கட்டிடங்களை மக்கள் அமைக்க முற்படுகின்றபோது அவற்றை ஆரம்ப நிலையிலேயே இடித்தழிப்பது என்றும் சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More