Home இலங்கை காதல் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றிய இளைஞன் கைது…

காதல் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றிய இளைஞன் கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


யுவதி ஒருவரை காதலித்து, அவருடன் ஒன்றாக இருந்து அந்த காட்சிகளை கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றிய இளைஞனை வென்னப்புவ காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் வென்னப்புவ, தும்மல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். யுவதியுடன் ஒன்றாக இருக்கும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த காதல் தொடர்புக்கு யுவதி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், யுவதி, சந்தேக நபருடனான தொடர்புகளை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர், யுவதி தன்னுடன் இருக்கும் காட்சிகளை இணையத்தளத்தில் பதிவேற்ற போவதாகவும் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த காட்சிகளை அனுப்பி வைக்க போவதாகவும் கூறி, அவ்வப்போது பணம் பறித்து வந்துள்ளார்.

சந்தேக நபருக்கு அஞ்சிய யுவதி, தனது அம்மம்மாவிடம் மாத்திரம் விடயத்தை கூறி, அவரது வங்கி அட்டையில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்துள்ளார். மேலும் கடன் வாங்கியும் கொடுத்துள்ளார். எனினும் சந்தேக நபர் தொடர்ந்தும் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால், அவரிடம் இருந்து தப்பிக்க அம்மம்மாவின் வங்கி அட்டை, அதன் இரகசிய இலக்கங்களை வழங்கியுள்ளார். இதன் ஊடாக சந்தேக நபர் 11 லட்சத்து 29 ஆயிரத்து 400 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார்.

பணத்தையும் பெற்றுக்கொண்ட சந்தேக நபர், தான் யுவதியுடன் இருக்கும் காட்சிகளை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்து கொண்ட யுவதி, நடந்த விடயங்களை பெற்றோரிடம், பெற்றோருடன் வென்னப்புவ காவற்துறை நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபரை கைதுசெய்த காவற்துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More