Home இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலியில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை..

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலியில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை..

by admin

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினர் நேற்று நடத்திய தேடுதல் நடவடிக்கையில்  6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதனால், சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஜிமல்கட்டா என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று நக்சலைட்டுகளுக்கும் காவல்துறையினருக்குமிடையே தீவிர துப்பாக்கி சண்டை இடம்பெற்றதாகவும் இதன்போது 6 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் இதே பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More