Home இலங்கை முல்லைத்தீவில் சிறுவனைக் காணவில்லை

முல்லைத்தீவில் சிறுவனைக் காணவில்லை

by admin


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் வசித்துவந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவரைக் காணவில்லை என உறவினர்களால் புதுக்குடியிருப்பு காதவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சத்தியசீலன் கிருஜன் என்னும் குறித்த சிறுவன் கடந்த 22 ஆம் திகதி உடையார்கட்டு பகுதியில் உள்ள கணணி கற்கை நிலையத்துக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள சிறிய தந்தையில் வீட்டில் உணவருந்திவிட்டு 2 மணியளவில் வீடு செல்வதாக தெரிவித்து விட்டு சென்றவர் வீடு வந்து சேரவில்லை என அவரது தந்தையார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More