Home இலங்கை வெசாக் அலங்காரத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதியில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு!

வெசாக் அலங்காரத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதியில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு!

by admin


கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினர் வெசாக் தினத்தை முன்னிட்டு அலங்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நகரத்திலும் புத்தர் சிலை அமைத்த பகுதியில் வெசாக் வெளிச்சக் கூடுகள் மற்றும் இராணுவத்தினரின் இலட்சினைகள் மற்றும் பௌத்த இலட்சினைகள் பொறித்த கூடுகள் கொடிகள் என்பன பறக்கவிடப்பட்டுள்ளன.

இதேவேளை கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பாரியளவிலான வெசாக் அலங்கார காட்சிகளுக்கான ஏற்பாடுகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.  அலங்கார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதியால் செல்லும் தமிழ் பெண்களுக்கு தொந்தரவு அளிக்கும் விதமாகவும் அசெகரியப்படுத்தும் விதமாகும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More