Home இலங்கை இத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கையர் துருக்கி விமான நிலையத்தில் கைது

இத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கையர் துருக்கி விமான நிலையத்தில் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

போலி விசாவை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துருக்கி சென்று அங்கிருந்து இத்தாலிக்கு செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் துருக்கி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட அவர் கடந்த 25 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபரை கைதுசெய்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

கண்டி ஒகஸ்டவத்தை பகுதியை சேர்ந்த 21 வயதான பீ. சஞ்சய வீரசிங்க என்ற இந்த சந்தேக நபரை 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு மினுவங்கொடை பதில் நீதவான் சரல கருணாரத்ன உத்தரவிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More