Home இந்தியா கலைஞர் கருணாநிதியை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

கலைஞர் கருணாநிதியை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

by admin


இந்திய அளவில் மூன்றாவது அரசியல்  அணி ஒன்றை ஒருவாக்குவது தொடர்பாக  ஸ்டாலினை சந்தித்து பேச சென்னை வந்துள்ள தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்துள்ளார்.

இந்தியால் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். முதற்கட்டமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்து இது தொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழக செயல்தலைவர் முக ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்துவதற்கான சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அவர் அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

இதனையடுத்து சந்திரசேகர் ராவ் ஸ்டாலின் சந்திப்பில் ஈடுபட்டு இந்திய அளவில் மூன்றாவது அரசியல் அணி தொடர்பில் ஆலோசனை நடத்தினார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More