Home இலங்கை விடுதலைப்புலிகளின் கொள்கலனை தேடி மீண்டும் அகழ்வுப் பணிகள்

விடுதலைப்புலிகளின் கொள்கலனை தேடி மீண்டும் அகழ்வுப் பணிகள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விடுதலைப்புலிகளின கொள்கலன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதிய இடத்தில் மீண்டும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்ற மாதம் 11 ஆம் திகதி அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்த போதும் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் அன்று நிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் இன்று(02) மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திற்கு பின்புறமாக குறித்த அகழ்வு மீண்டும் பணிகள் இன்று(02) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.

விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொள்கலன் ஒன்றுகுறித்த பகுதியில் காணப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த அகழ்வுபணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளர் மற்றும் கிராமசேவையாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் முன்னிலையில் இடம்பெறுகின்றன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More