Home இலங்கை ஆவா குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் கைது…

ஆவா குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் கைது…

by admin

 

சுன்னாகம் காவற்துறையினர்  மேற்கொண்ட சுற்றவளைப்பின்போது, ஆவா குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று (04.05.18) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுன்னாகம் காவற்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், கைதடி, நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்நு 4 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டை மேற்கொள்வதற்கு எத்தணித்த போதே, குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், கைதுசெய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More