Home இந்தியா காஷ்மீரில் சிஆர்பிஎப் படையினர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் சிஆர்பிஎப் படையினர் சுட்டுக்கொலை

by admin


தெற்கு காஷ்மீர் பகுதியில் சிஆர்பிஎப் படையினர் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் தாக்கியா வாங்கம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கிடைத்ததனையடுத்து மத்திய ரிசர்வ் படையினர் இன்று காலை அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதனால் இரு தரப்புகுமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகள் தப்பிச்சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More