Home உலகம் சிங்கப்பூரில் தமிழ் மொழி, அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதி..

சிங்கப்பூரில் தமிழ் மொழி, அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதி..

by admin


சிங்கப்பூரில் தமிழ் மொழி, அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஈஸ்வரன் கூறியுள்ளார். சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், தமிழ் மொழிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்குள்ள பாடசாலைகளிலும் தமிழ் மொழி பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழ் மொழியின் இந்த அலுவலக மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஈஸ்வரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த செவ்வி ஒன்று அங்குள்ள தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது.

அதில் மந்திரி கூறுகையில், ‘தமிழ் மொழி தொடர்பான அரசின் கொள்கை முடிவும், ஆதரவும் தெளிவாக உள்ளது. மற்றபடி ஒவ்வொரு நாளும் தமிழை பேசி அதை வாழும் மொழியாக மாற்றுவது அனைத்தும் அந்த சமூகம், குறிப்பாக இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது’ என்றார். தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கு, தமிழ் மொழி திருவிழா நடத்துவது சிறந்த வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More