Home இந்தியா ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மனு தொடர்பில் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மனு தொடர்பில் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

by admin


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பில் பதிலளிக்குமாறு இந்திய மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் கோரியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ராமசுப்பு என்பவர் உச்சநீதிமன்றில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. மேலும், மக்களுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்துவதால் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் ஆலை இயங்க அனுமதி அளித்துள்ளது.

எனவே இந்த வழக்கை முழுமையாக ஆராயாமல் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றில் விசாரணைக்கு வந்தநிலையிலேயே அதற்கு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More