Home இலங்கை மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால்…

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன இந்த சவாலை விடுத்துள்ளார். சபரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை முடிந்தால் அரசாங்கம் நடத்திக் காண்பிக்கப்பட்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மை காரணமாகவே மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு;ள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து போட்டியிட்டால் அதனை வரவேற்பதாகவும், கூட்டு எதிர்க்கட்சி அமோக வெற்றிகளை பதிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More