Home இலங்கை கீத் நொயாரின் உயிரை நானே காப்பாற்றினேன் – கரு ஜயசூரிய

கீத் நொயாரின் உயிரை நானே காப்பாற்றினேன் – கரு ஜயசூரிய

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரபல ஊடகவியலாளர் கீத் நொயாரின் உயிரை தாமே பாதுகாத்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தமது தலையீட்டின் காரணமாகவே நொயார் பாதகாக்கப்பட்டதாகவும் நொயார் கடத்தல் விவகாரம் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்கு மூலம் வழங்குவதற்கு தாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நொயார் கடத்தல் விவகாரம் தொடர்பில் கரு ஜயசூரியவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் எந்தவொரு நேரத்திலும் இது குறித்த விளக்கத்தை அளிக்கத் தயார் என கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More