Home இலங்கை பெரிய பரந்தன் புதிய மதுபானசாலைக்கு, மூன்றாவது தடவையாகவும் மக்கள் எதிர்ப்பு…

பெரிய பரந்தன் புதிய மதுபானசாலைக்கு, மூன்றாவது தடவையாகவும் மக்கள் எதிர்ப்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் பெரியபரந்தன் பிரதேசத்தில் அமையவுள்ள மதுபானசாலைக்கு பிரதேச மக்கள் மூன்றாவது தடவையாகவும் எதிர்ப்புத் தெரிவித்து மகஜர்களை கையளித்துள்ளனர்.

இன்று (16-05-2018) பெரிய பரந்தன் பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜர்களை மாவட்ட அரச அதிபர், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளித்துள்ளனர்

இந்த மகஜருடன் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மற்றும், கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி பாடசாலை சமூகத்தினரால் நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட்ட எதிர்ப்பு கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பல பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

குறித்த புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனதிதிரேசா பெண்கள் கல்லூரி, விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் என்பன காணப்படுகின்றன. பெரிய பரந்தன் கிராமத்தில் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள். எனவே எமது பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவது எங்களை பொறுத்தவரை பெரும் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களையும் ஏற்படுத்தும்.

முக்கியமாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பனை, தென்னை வளர்ப்பு தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் புதிய மதுபானசாலை அமையும் போது இவா்களின் குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

அந்த வகையில் தாங்கள் புதிய மதுபானசாலை விடயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கான அனுமதியை வழங்காதிருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More