Home இலங்கை தவ­ராசாவுக்கும் ‘முன்­னோக்கி நகர்­வோம்’ திட்டத்திற்கும் வந்த சோதனையும் சவாலும்…

தவ­ராசாவுக்கும் ‘முன்­னோக்கி நகர்­வோம்’ திட்டத்திற்கும் வந்த சோதனையும் சவாலும்…

by admin

வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வால் ஆரம்­பிக்­கப்­பட்ட ‘முன்­னோக்கி நகர்­வோம்’ செயல் திட்டத்திற்கான  முத­லா­வது முறைப்­பாட்டை வடக்கு மாகாண ஆளு­நர் குரே வழங்­கி­யுள்­ளார். ஈ.பி.டி.பியால் அபகரிக்கப்பட்ட  காணி விவ­கா­ரம் ஒன்றையே அவர் தனது முறைப்­பா­டாக வழங்­கி­யுள்­ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘யாழ்ப்­பா­ணம் ஸ்ரான்லி வீதி­யில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணியை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவானந்தா, காணி உரி­மை­யா­ள­ரின் அனு­ம­தி­யையோ அல்­லது எந்­த­வி­த­மான கொடுப்­ப­னவோ இன்றி அத்­து­மீறி அப­க­ரித்­துள்­ளதாக ஏற்கனவே முறைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சிறி­தர் தியேட்­ட­ருக்கு செல்பவர்களின் வாக­னத் தரிப்­பி­ட­மாக அந்­தக் காணி­யைப் பயன்­ப­டுத்து­வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  அதனை மீட்­டுத் தாருங்­கள்’ என்று ஆளுநரிடம்  காணி உரி­மை­யா­ள­ரால் ஏற்கனவே  முறைப்­பாடு ஒன்று  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த முறைப்­பாட்­டையே ஆளு­நர், முன்­னோக்கி நகர்­வோம் அமைப்­பி­டம் கைய­ளித்­துள்­ளார். ஈ.பி.டி.பியைப் பிரதிநிதித்துவப்படுத்தி  வடக்கு மாகாண சபை­யில் எதிர்கட்சித்  தலை­வ­ராக உள்ள சி.தவ­ரா­சா­வி­டம், அவ­ரது  கட்சியின் செய­லாளர் நாயகத்திற்கு  எதி­ரான முறைப்­பாட்டை ஆளு­நர் முத­லா­வ­தாக கைய­ளித்­துள்­ளமை  முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More