Home இலங்கை கீத் நொயார் கடத்தலுடன் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு உண்டா என விசாரணை…

கீத் நொயார் கடத்தலுடன் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு உண்டா என விசாரணை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு உண்டா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து நீதிமன்றில் அறிவித்துள்ளனர். கீத் நொயார் கடத்தல் வழக்கு விசாரணைகள் கல்கிஸ்ஸ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை புலனாய்வுப் பிரிவினருக்கு இராணுவம் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More