Home இந்தியா தூத்துக் குடி துப்பாக்கிச்சூடு நடத்த உயர்மட்டத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? ரஜனி, கமல் கண்டனம்!

தூத்துக் குடி துப்பாக்கிச்சூடு நடத்த உயர்மட்டத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? ரஜனி, கமல் கண்டனம்!

by admin

தமிழகத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்த உயர் மட்டத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி நீண்ட நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100ஆவது நாளான இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் வாழும் பகுதியை மாசுபடுத்திக்கொண்டு இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மேலிடத்தில் இருந்து உத்தரவு வராமல் இத்தகைய துப்பாக்கிச்சூடு நடக்க வாய்ப்பு இல்லை. இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளை மட்டுமே பழிவாங்கிவிட கூடாது. மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என்பதே தமிழகத்தின் கேள்வி என்றும் அரசு வன்முறையும் கண்டிக்கத்தக்கதே. பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது என்றும் கமல்ஹாசன் கூறினார்.

இதேவேளை இந்த விடயம் குறித்துக் கூறியுள்ள நடிகர் ரஜனிகாந்த் மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More