Home இலங்கை தலைமன்னாரில் அமைக்கப்பட்ட புதிய பாலம் திறந்து வைப்பு..

தலைமன்னாரில் அமைக்கப்பட்ட புதிய பாலம் திறந்து வைப்பு..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வட மாகாண சபையினால் அமுல் படுத்தப்பட்ட கிராமிய பாலத்திட்டத்தின் கீழ் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட தலைமன்னார் கிராமத்திற்கான பிரதான பாலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 22 மீற்றர் கொண்ட குறித்த பாலம் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ராஜன் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் 87 கிராமிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் 16 பாலங்கள் அமைக்கப்படவுள்ளது. அந்தவகையில் முதல் கட்டமாக தலைமன்னாரில் அமைக்கப்பட்ட குறித்த காலம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் போக்கவரத்திற்காக விடப்பட்டுள்ளது.

இதன் போது விருந்தினர்களான அருட்தந்தை நவரெட்ணம் அடிகளார், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன்,மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More