Home இந்தியா பஞ்சாபில் வளர்ந்து வரும் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டுக் கொலை – காதல் விவகாரமா?

பஞ்சாபில் வளர்ந்து வரும் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டுக் கொலை – காதல் விவகாரமா?

by admin


இந்திய பஞ்சாப் மாநிலத்தின் வளர்ந்து வரும் பாடகரான சேர்ந்த 22 வயதான, நவ்ஜோத் சிங் சன்டிகர் அருகே உள்ள எஸ்.ஏ.எஸ். நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தேரா பஸ்ஸி பகுதியில், உடலில் 5 குண்டுகளுடன், நவ்தீப் சிங் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவற்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

நவ்தீப் சிங்கை யாரோ அருகில் இருந்து சுட்டுக்கொலை செய்திருக்கலாம் எனவும், அவரின் நிஸ்ஸான் மைக்ரா கார் அவரது உடல் கிடந்த இடத்திற்கு அருகில் நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவற்துறையிர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடைய பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. தொழில் பகை இருப்பதாகவும் தெரியவில்லை.

நவ்தீவ் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தொலைபேசியில் தனது தாய்க்கு அழைப்பெடுத்து தனது சொந்த ஊரான பெஹ்ரா கிராமத்திற்கு திரும்பி வருவதாக தெரிவித்துள்ளார்.  அவர் சொன்னபடி செல்லாததால் குடும்பத்தார் அவரை தேட ஆரம்பித்தனர்.  நவ்தீப் சிங் மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு அருகே ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்ததை அவரது உறவினர் பார்த்துள்ளார். காதல் விவகாரம் தொடர்பாக நவ்தீப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More