Home இலங்கை அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அடையாள வேலை நிறுத்தம்

அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அடையாள வேலை நிறுத்தம்

by admin

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அடையாள  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

எதிர்வரும் 3ம் திகதி நள்ளிரவு 12மணி தொடக்கம் 5ம் திகதி நள்ளிரவு 12மணி வரை இரண்டு நாட்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
• ஐந்து வருடங்களாக சேவையிலுள்ள அஞ்சல் சேவைதரம் 11 உத்தியோகத்தர்களின் நியமனங்களைஉடனடியாக உறுதிசெய்தல்.
• அஞ்சல் சேவைப் பிரச்சனைகளுக்கான தீர்வாக சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை தாமதமின்றி சமர்ப்பித்து ஒப்புதல் வழங்குதல்.
• தொழில்நுட்ப கோளாறுகளை சீர் செய்து  வீழ்ச்சியுற்ற அஞ்சல் சேவையை மீண்டும் நிலைநிறுத்துதல்,
• 2012 பொறுப்பு அஞ்சல் அதிபர்; பரீட்சையை நடைமுறைப்படுத்துதல்.
• பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக பெற்றுக் கொடுத்தல்.
• பொறுப்பு அஞ்சல் அதிபர் பரீட்சையில் தோற்றிய முதல் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு MN-07 வேதனத்தை பெற்றுக் கொடுத்தல்
ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அதன் சங்க உறுப்பினர்களை இப்போராட்டத்தில் இணையுமாறு அழைப்புவிடுத்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More