Home இலங்கை கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியா? நாடு கண்ணீர்வடிக்க வேண்டிய நிலை உருவாகும்…

கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியா? நாடு கண்ணீர்வடிக்க வேண்டிய நிலை உருவாகும்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

புதிய அர­சி­ய­ல­மைப்பை அர­சாங்கம் கொண்­டு­வரத் தவ­றி­ய­தா­லேயே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் 20 ஆவது திருத்­தத்தை நாங்கள் கொண்­டு­வந்தோம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை இருக்கும் நிலையில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை மக்கள் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்தால் முழு நாடும் கண்ணீர் வடிக்கவேண்டிய  நிலை ஏற்­படும் என பாராளுமன்ற  உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­னெத்தி தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்­தி­ருக்கும் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்­பாக கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரையாற்றிய  அவர் ,

அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரும்­போது, புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்படுத்துவதாகவும், அத­னூ­டாக நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமையை  இல்­லா­ம­லாக்­கு­வ­தா­கவும் மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. என்­றாலும் கடந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான எந்த கலந்துரையாடல்களும் இடம்­பெ­ற­வில்லை. அத­னால்தான் ஜனா­தி­பதி தேர்தலுக்கு  முன்னர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்லாமல் ஆக்கும் நோக்­கத்­துடன் 20ஆவது திருத்­தத்தை நாங்கள் கொண்­டு­வந்தோம்.

அத்­துடன் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்லாமல் ஆக்குவது எனக் அதி­கா­ரத்­துக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தெரி­வித்­தி­ருந்­தனர். ஆனால் அது இடம்­பெ­ற­வில்லை. அதனாலேயே தொடர்ந்தும் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தல்­வ­ரைக்கும் இதனை தொடராமல் இருக்க,  அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வரக்கூடியவர்  நிறை­வேற்று அதி­காரம் இல்­லா­த­வ­ராக தெரிவுசெய்யப்பட ப­ட­வே­ணடும் என நாங்கள் முயற்­சிக்­கின்றோம்.  மேலும் தற்­போதை ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பலரும் விமர்­ச­னங்­களை தெரி­வித்து நாட்­டுக்கு உறுதியான, அச்­ச­மின்றி தீர்­மானம் எடுக்­க­வேண்­டிய தலைவர் ஒருவர் அவ­சியம் என தெரிவிக்கின்றனர்.  அதற்­காக நிறை­வேற்று அதி­காரம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கக் கூடியவர்களும் இருக்­கின்­றனர்.

இவ்­வா­றான கருத்துகள் நாட்­டில்  நிலவும் தற்போதைய சூழலில் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ்வை  நியமிக்க வேண்டும் என்ற கருத்தும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ்வாறான  நிறைவேற்று ஜனா­தி­ப­தி­முறை இருக்கும் நிலையில் மக்கள் கோத்தாபய ராஜ­பக்ஷ்வை ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்தால் நாட்டு மக்கள் அனை­வரும் கண்ணீர் வடிக்க வேண்­டிய நிலையே ஏற்­படும்.

மேலும் நாங்கள் முன்­வைத்­துள்ள 20ஆம் திருத்தம் நாட்டை பிரிக்கக் கூடியது, ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அதி­கா­ரத்தை வழங்கும் நோக்கத்தில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. மற்றும் 13ஆம்  திருத்தத்தில்  ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்­கி­விடும் என்றும் சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர்.

ஆனால் அவ்­வா­றான எந்த விட­யமும் இதில் உள்­வாங்­கப்­ப­ட­வி­லிலை. மாறாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விலை­போ­காமல் கட்சி மாறுவதை  தடுத்­துள்ளோம். ஜனா­தி­ப­தியின் பொது மன்னிப்பில்  கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­டு­வது, ஜனா­தி­பதி கட்சி சார்­பற்­ற­வ­ராக இருப்­பது மற்றும் பாரா­ளு­மன்ற அமர்­வு­களை ஒத்­தி­வைக்கும் அதி­காரம் இல்­லா­ம­லாக்­குதல் போன்ற விடயங்களே  உள்வாங்கப்பட்டு இருக்கின்றன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­னெத்தி சுட்டிக் காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More