Home இந்தியா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல்!

by admin

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், தஞ்சாவூரில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

தஞ்சையிலிருந்து சென்னை வருவதற்காக நேற்றையதினம் , பெ.மணியரசன் தனது உதவியாளருடன் புகையிரத நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது இனம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை தாக்கியதால் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் அவரது பணம் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கைப் பையையும் இனந்தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இந்த வியடம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பெ.மணியரசனைத் தாக்கியவர்களைப் பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More