Home சினிமா விரைவில் தம்பி கார்த்தியுடன் சேர்ந்து நடிப்பேன் – சூர்யா

விரைவில் தம்பி கார்த்தியுடன் சேர்ந்து நடிப்பேன் – சூர்யா

by admin

தம்பி கார்த்தியின் ஆசைப்படி விரைவில் அவருடன் சேர்ந்து திரைப்படத்தில் நடிப்பேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் உள்பட ஒரு நட்சத திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது

இந்த கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ஒன்றாக மேடை ஏறி பேசினர். அப்போது, அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தமது ஆசையை கார்த்தி வெளிப்படுத்தினார்.

இதையடுத்து பேசிய சூர்யா, தம்பியின் ஆசை விரைவில் நிறைவேறும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர எனவும் . ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும் தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும் எனவும் சூர்யா தெரிவித்துள்ளார்

நானும் கார்த்தியும் குழந்தையாக இருக்கும் போது சத்யராஜ் மாமா, அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு’ எனவும் சூர்யா தெரிவித்தார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More