Home இலங்கை வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் விரைவில் முடிவடைகிறது…

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் விரைவில் முடிவடைகிறது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வடக்கு மாகாண சபையின் கால எல்லை தொடர்பில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகும் நிலையில் அவை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் மாகாண சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

மாகாண சபையின் அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற போது சபையின் அவைத் தலைவரான சீ.வீ.கே.சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபையின் ஐந்தாண்டு காலம் முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் மாகாண சபையின் கால எல்லைகள் குறித்து ஊடகங்களில் பல்வேறுபட்ட கதைகள் வெளியாகி வருகின்றன.

இந் நிலையில் முதலாவது வடக்கு மாகாண சபை கடந்த 25.10.2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சபையின் ஐந்தாண்டுகள் காலம் எதிர்வரும் 25.10.2018 ஆம் திகதியுடன் முடிவடைகிறதென்பதை வெளிப்படுத்தியே இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றேன் என்றார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More